முத்தமழை இங்கு கொட்டி தீராதோ
பத்தி எரியாதோ
பொல்லா இரவோ சொல்லா உறவோ (தம்தோம்தம் தோம்தம் தம்)
இல்லா ஒருவனை வேண்டியெங்கும் உசுரோ (தம்தோம்தம் தோம்தம் தம்)
தீம் தோம் த
தீம் தன தோம் தன தோம்
காலை கனவினில்
காதல் கொண்டேன்
என்னோடு உன்னை
ஒன்றாக்கும் வரை
என்ன செய்தும்
வலி தீரவில்லை
கண்ணான கண்ணே
என் கண்ணாளா
என் உள் மன காதலை
கண்டாயா
கரு மை
கொண்ட கண்ணோக்கி
பொய் சொல்லி நின்றாயா
போதும் போதும் என சென்றாயா
முத்தமழை இங்கு
கொட்டி தீராதோ (தம்தோம்தம் தோம்தம் தம்)
பத்தி எரியாதோ (தம்தோம்தம் தோம்தம் தம்)
நிஸஸ நிஸரிஸச நிஸஸ நிஸரிஸச (கரிகரிகம கரிகரி)
கரிகம கரி கரி நித நித தமப
ஓ பாலை நிலத்தினில்
சோலை நிழலென
காதல் சொல்வேன் நான்
மோக பனி போர்வையில்
கரம் கோர்கையில்
காதல் சொல்வேன் காதில்
நான் காதலி காதலன் நீ
வேறு எல்லாம் வெறும் வேஷம் என்பேன்
வேஷம் என்பேன் வெறும் வேஷம் என்பேன்
காலம் யாவும் நீதானே
இந்தக் காலன் வந்தால் வெல்வேனே
மறுமொரு சூரியன் பல தாரகை
இன்னும் ஒருமுறை
எந்தன் கதை சொல்லவா (சொல்)
சொல் சொல் சொல் சொல் சொல் சொல்
காதில் விழும் வரும் வரை
காதல் பாடவா பாடவா
பொல்லா இரவோ சொல்லா உறவோ
எல்லா ஒருவனை வேண்டியெங்கும் உசுரோ